பூ அவிழும் பொழுதில்
ஓராயிரம் கனா...
ஓர் கனவின் வழியில்
அதே நிலா...
பால் சிரிப்பால் ஒளிப் பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும் ஓர்நிலையே
மேகம் கூடும் நேரம் பூமழையே
என் மூச்சுக் குழலிலே
உன் பாடல் தவழுதே...
உண்டான இசையிலே
உள் நெஞ்சம் நனையுதே...
வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே....
வெண்சிறகேற்றாள்... என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தே... கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும் ஓர்நிலையே
தேகம் தோறும் தூவும் பூமழையே !
என் மூச்சுக் குழலிலே
உன் பாடல் தவழுதே...
உண்டான இசையிலே
உள் நெஞ்சம் நனையுதே...!