Thulli Eylunthathu Paattu- Geethanjali ,துள்ளி எழுந்தது பாட்டு-Song Lyrics



கீதாஞ்சலி

துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடுதான் அதை பாடனும்
இரவோடுதான் அரங்கேரானும்

-(துள்ளி எழுந்தது பாட்டு)


குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல் ..........
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குது

-(துள்ளி எழுந்தது பாட்டு)


அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே , பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
நான் தேடிடும் ராசாத்தியே
நீ போவதா ஏமாற்றியே
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்.......