வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'கோச்சடையான்' பாடல் வரிகள்:
பெண்ணுக்கு ஆண் செய்து தரும் சத்தியப் பாடல் இது...
----------------------------------------------------------------------------------------------------------------------
காதல் கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே...
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது.
இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச்
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயாப்
பிரியம் காப்பேன்
செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து
சேவை செய்வேன்
நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன்
கைப்பொருள் யாவும் கரைந்தாலும்
கணக்குக் கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே...
மாதமலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்...
பெண்ணுக்கு ஆண் செய்து தரும் சத்தியப் பாடல் இது...
----------------------------------------------------------------------------------------------------------------------
காதல் கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே...
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது.
இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச்
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயாப்
பிரியம் காப்பேன்
செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து
சேவை செய்வேன்
நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன்
கைப்பொருள் யாவும் கரைந்தாலும்
கணக்குக் கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே...
மாதமலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்...