Kochadaiyaan -Karma Veeran Song

  'கர்ம வீரன்'

ஆகாய மேகங்கள் பொழியும்போது
ஆதாயம் கேளாது
தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது
ஏ வீரனே கர்ம வீரனே கடமை வீரனே
தோல்விகளாலே துவண்டு விடாதே
வெற்றிகளாலே வெறி கொள்ளாதே

கல்லடி கல்லடி படுமென்பதாலே
மரம் காய்க்காமல் போவதில்லை
சொல்லடி சொல்லடி படுமென்பதாலே
வெற்றி காணாமல் போவதில்லை

மாலைகளைக் கண்டு மயஙங்காதே
மலைகளைக் கண்டு கலங்காதே

காற்றே கற்றெ நீ தூஙுவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதேயில்லை ‍‍‍‍‍ உன்
வாழ்விலே சத்தியம் தோற்பதேயில்லை

நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா ‍ நீ
ஓடிக்கொண்டே இரு
நிம்மதி வாழ்வில் வேண்டுமா
பாடிக்கொண்டே இரு

கோழை மகன் மன்னித்தால் அது
பெரிதல்ல பெரிதல்ல‌
வீர மகன் மன்னித்தால் அது
வரலாறு வரலாறு

பொன்னும் மண்ணும்
வென்று முடிப்பவன்
கடமை வீரனே அந்தப்
பொன்னை ஒருநாள்
மண்ணாய்ப் பார்ப்பவன் கர்ம வீரனே

Kochadaiiyaan  Songs
Karma Veeran song
Music :AR Rahman
Lyrics : Vairamuthu